தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் போலி சாமியார் ஒருவர் அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அவர், உங்கள் வீட்டில் வாஸ்து சரியில்லை. வாஸ்து தோஷத்தை சரி செய்தால் நீங்கள் எடுக்கும் செயல்கள் வெற்றி பெறும். நான் யார் வீட்டுக்கும் செல்வது கிடையாது. உங்கள் வீட்டிற்கு கடவுள் உத்தரவிட்டதால் வந்துள்ளேன் எனக்கூறியுள்ளார். சாமியாரின் பேச்சை முழுவதுமாக நம்பிய கங்காதரும், ராதாவும் இதற்கு பரிகாரத்தை கூறுங்கள் சுவாமி என்றனர்.
அவர் கூறியபடி ராதா வீட்டில் இருந்த 35 சவரன் மதிப்புள்ள செயின் மற்றும் தங்க நகைகளை அரிசி பாத்திரத்தில் வைத்து போலி சாமியாரிடம் வழங்கியுள்ளார். அதனை மஞ்சள் துணியில் வைத்து கயிறு கட்டி சிறிது நேரம் பூஜை செய்த சாமியார், இதை பூஜை அறையில் வைத்துவிட்டு மாலையில் குளித்துவிட்டு இதை திறந்து அதில் உள்ள அரிசியை சமைத்து சாப்பிட்டால் வீட்டில் உள்ள தோஷங்கள் விலகும் என தெரிவித்தார்.
இதேபோன்று தம்பதியினர் மாலையில் குளித்துவிட்டு பாத்திரத்தைத் திறந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் தாங்கள் வைத்த நகைகள் எதுவும் இல்லை. போலி சாமியார் நகை வைத்திருந்த பாத்திரத்தை மறைத்து வைத்துவிட்டு வெறும் அரிசி உள்ள பாத்திரத்தை அவர்களிடம் வழங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகத்யாலா போலீசில் கங்காதர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியாரை ேதடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…