கடவுளின் தேசத்தில் கண்டு கொள்ளாமல் நடக்கும் பாலியல் தொல்லை ..!!ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்..!

Default Image

கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதங்களில் மட்டும் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக மட்டும் 589 வழக்குகள் பதிவாகி உள்ளது.இதற்கு முன்னரே கடந்த 2008 ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் உள்ள சிறுமிகளுக்கு மட்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாக  215 வழக்குகள் பதிவாகியது அப்போதே அதிர்ச்சி அளித்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் இது தொடர்பாக  1101 வழக்குகளாக உயர்ந்து உள்ளது.
இது மட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதம் வரை அம்மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் பலாத்கார கொடுமைகள் தொடர்பாக 999 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் படி  கடந்த மாதத்தில் மட்டுமே 589 வழக்குகள் பதிவாகியது.இந்த கொடீர சம்பவமானது நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 சிறுமிகள் இந்த பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கேரளாவில் பாலியல் கொடுமைகள் நடப்பாண்டில் அதிகரித்து வருவதாக மகளிர் நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவை ஆட்சி செய்து வரும் அரசு  இதனை கருத்தில் கொண்டும்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்