கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது – ராஜ்நாத் சிங்

Default Image

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தான் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாகவும், நக்சல் பாதிப்பு மிக்க மாவட்டங்கள் 90-ல் இருந்து 12 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோத ஊடுருவலும் 80 சதவீதம் குறைந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்பு படையினருக்கு, பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்