கஜா புயலால் பாதிப்பு …!இடைக்கால நிவாரண நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கீடு …!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசு  இடைக்கால நிவாரண நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.

 
புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
பின்  பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.அதன் பின்னர் அவர் கூறுகையில், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.1,500 கோடி கோரப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்நிலையில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசு  இடைக்கால நிவாரண நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் . மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்