ஒரே வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நல்ல பாம்பு குட்டிகள் -அதிர்ச்சி வீடியோ..!

Default Image
ஒடிசாவில்  பதராக் மாவட்டத்தில் பைகாசாகி கிராமத்தில் பிஜே புயான் தனது மகள் விளையாடும் அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறுவதைப் பார்த்து, பாம்பைப் பிடித்துச் செல்லுமாறு அப்பகுதியில் உள்ள என்.ஜி.ஓ அமைப்பு ஒன்றுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலை அறிந்த பிஜே புயான் வீட்டுக்கு விரைந்த மீட்புக் குழுவினர், பல மணிநேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, ஒரு அறையில் நாகப் பாம்பு குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒன்று, இரண்டு குட்டிகள் அல்ல. சுமார் 110-க்கும் மேற்பட்ட நாகப் பாம்பு குட்டிகள்,  குவியல் குவியலாக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, ஊர்ந்து உள்ளன. மேலும் 20  முட்டைகள் இருந்து உள்ளதை கண்டு   அதிர்ச்சியில் உறைந்தனர்.ஒவ்வொன்றும் 2 மீட்டர் நீளம் இருந்து உள்ளன.
இதையடுத்து, வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், நாகப் பாம்புக் குட்டிகளைப் பத்திரமாக மீட்டு எடுத்துச் சென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்