ஒடிசா மாநிலம் கஞ்சா மாவட்டத்தில் காட்டு யானைகள் தாக்குதலால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் கஞ்சா மாவட்டம் காட்டு பகுதியிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. இந்த யானைகள் தோட்ட பயிர்களை நாசம் செய்தன.
மேலும் அப்பகுதியில் இருந்த தொழிலாளர்களையும் யானைகள் விரட்டின. இதனால் கிராம மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் தோட்ட தொழிலாளர்களும் வீட்டை விட்டு வெளியே வர இயலாமல் முடங்கினர்.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கண்கரடா மற்றும் அடப்படா கிராமங்களில் 5 காட்டு யானைகள் நுழைந்தது. யானைகளை விரட்டவும் அதனை வேடிக்கை பார்க்கவும் மக்கள் கூடிய நிலையில், பொதுமக்களை காட்டு யானைகள் துரத்தி துரத்தி தாக்கியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வனப்பகுதி சுற்றியுள்ள கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர்கதை ஆகி வருகிறது. மேலும் ரயில் மற்றும் சாலை விபத்துகளிலும் யானைகள் சிக்கி உயிரிழக்கும் சமபவமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் காரணமாக ஒடிசாவில் வனப்பகுதி சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…