தோல், ஜவுளி மற்றும் கடல்சார் பொருட்கள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதிக்கு, ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக ஏற்றுமதியாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாக மத்திய தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். உரிய நேரத்தில், வங்கிக் கடன் கிடைக்காததால், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். விவசாயத்தை போல, ஏற்றுமதியையும், முன்னுரிமை கடன் பட்டியலில் சேர்க்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பிரச்சினைகளுக்கு தீர்வாக, ஏற்றுமதியாளர்களுக்கு ‘இ-வாலட்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும் என்றும், ஏற்றுமதி செலவை குறைக்க, விரைவில் நாடாளுமன்றத்தில், பன்முக சரக்கு போக்குவரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…