Categories: இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுமி! பிரதமர் வாழ்த்து..!

Published by
Dinasuvadu desk
நேபாளத்தில் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் அமைந்துள்ளது. 8,848 மீட்டர் உயரம் கொண்ட அந்த சிகரத்தில் ஏறுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அங்கு நிலவும் உறைபனி, கடுமையான நிலப்பரப்பு போன்றவற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
இருப்பினும், மலை ஏற்றத்தில் அதிக ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் அந்த மலை மீது ஏறி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில், அரியானா மாநிலத்தில் உள்ள பிசார் என்ற இடத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி சிவாங்கி பதக், எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இளம் வயதில் எவரெஸ்டை தொட்ட இந்திய பெண் என்ற பெருமை இவர் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ‘உடல் ஊனத்துடன் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் இந்தியரான அருணிமா சின்ஹாவின் சாதனையால், நான் ஈர்க்கப்பட்டேன். அவரின் அந்த முயற்சி தான் என்னையும் சாதிக்கத் தூண்டியது ‘ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த சாதனையை படைத்த சிவாங்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவு செய்திருந்த வாழ்த்து செய்தியில், மகத்தான சாதனை. வாழ்த்துக்கள் சிவாங்கி, என பதிவு செய்துள்ளார்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

14 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

22 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago