சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக ஜூலை 7-ம் தேதி டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகுமாறு மத்திய முன்னாள் மந்திரி சசி தரூருக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக தன்னை பழிவாங்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ள சசி தரூர், சுனந்தா புஷ்கர் மரணத்தில் எனக்கு எதிரான அடிப்படை ஆதரங்களற்ற பொய் குற்றச்சாட்டுகளை வீரியமாக எதிர்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிதரூர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மிகுந்த ஒத்துழைப்பை அளித்து வருகிறேன். தற்போது எனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரங்களற்றது என்பதுடன், மனித அறிவுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதது என்பதை தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.
நமது நாட்டின் நீதித்துறையின் மூலம் இவ்விவகாரத்தில் வாய்மை வெல்லும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், எனக்கு எதிரான இந்த நடவடிக்கையை வீரியமாக எதிர்கொண்டு, எனது நன்மதிப்பை குலைக்கும் நோக்கத்திலான இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை முறியடிப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…