Categories: இந்தியா

எனக்கு பிரதமர் ஆகும் ஆசை அறவே இல்லை- சந்திரபாபு நாயுடு..!!

Published by
kavitha

பிரதமர் ஆகும் ஆசை எனக்கு இல்லை’’ என ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

நாம்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் வியாழக்கிழமை பிரம்மாண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
ஹைதராபாத் நகரில் தகவல் தொழில் நுட்பத்தை வளர்த்தது என்னுடைய ஆட்சியில்தான். தற்போது, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. மும்பை, டெல்லி நகரங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிட்டு புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர நினைக்கிறது.
ஒரு சிலை நிறுவ ரூ.2,500 கோடி செலவு செய்ய தீர்மானித்துள்ளது. ஆனால் தென் மாநிலங்களின் வளர்ச்சியில், அலட்சிய போக்கோடு நடந்து கொள்கிறது. பண மதிப்பிழப்பு திட்டத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது நான்தான். ஆனால், தற்போது, நாட்டில் கருப்பு பணம் மீட்கப்படவில்லை. இதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
முத்தலாக் திட்டத்தையும் அமல்படுத்த எங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக கடந்த 4 ஆண்டுகளாக பொறுத்திருந்தேன். ஆனால், நாங்கள் பாஜகவால் வஞ்சிக்கப்பட்டோம். கர்நாடக தேர்தலில் பாஜகவின் சூழ்ச்சி பலிக்கவில்லை.
பாஜகவின் வீழ்ச்சி கர்நாடகாவில் தொடங்கிஉள்ளது. இது இனி தெலங்கானா, ஆந்திரா என எதிரொலிக்கும். மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் சிலர் ‘வருங்கால பிரதமர் வாழ்க’ என கோஷமிட்டனர். அதற்கு, ‘‘எனக்கு பிரதமர் ஆகும் ஆசை இல்லை’’ என சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago