எந்த ஆபத்தும்  தாஜ்மஹாலுக்கு  இல்லை! சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை  அமைச்சர் மகேஷ் ஷர்மா

Default Image

எந்த ஆபத்தும்  தாஜ்மஹாலுக்கு  இல்லை என்று  சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை  அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் இடித்து விடுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆவேசமாக தெரிவித்தது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கானது சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தாஜ்மகால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஆகும்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தாஜ்மஹாலை காக்க மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தாஜ்மஹாலை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை  அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறுகையில்,எந்த ஆபத்தும்  தாஜ்மஹாலுக்கு  இல்லை என்றும், தாஜ்மஹாலின் இயல்பான வெண்மை நிறம் மாறவில்லை .மேலும்  இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்