ஊராட்சித் தலைவரும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட காட்சி..!

Default Image

தெலுங்கானா மாநிலத்தில் ஊராட்சித் தலைவரும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளளன. நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள தரப்பள்ளி (Dharapally) ஊராட்சித் தலைவராக இருப்பவர் கோபி.

இவர் பெண்ணின் குடும்பத்துக்கு 33 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை விற்றதாகவும் ஆனால் 10 மாதங்களாக நிலத்தை தராமல், நிலத்தின் விலை ஏறிவிட்டதால் மேலும் 50 லட்சம் ரூபாய் கேட்டு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகராறின்போது பெண் காலணியால் தாக்கியதையடுத்து அந்தப் பெண்ணை ஊராட்சித் தலைவர் மார்பில் எட்டி உதைத்தார்.

இரு தரப்பினரும் கொடுத்த புகார்களின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்