Categories: இந்தியா

உ.பி. பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் ஜனவரி முதல் மார்ச் வரை திருமணம் நடத்த தடை …!!

Published by
Dinasuvadu desk

ஜனவரி முதல் மூன்று மாதங்களுக்கு பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடத்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாட்டு பணிகளை உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் ஒரேசமயத்தில் லட்சக் கணக்கில் கூடும் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒருபகுதியாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார்.
அதன்படி குறிப்பிட்ட மாதங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருக்கும் நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறு மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
dinasuvadu.com

Published by
Dinasuvadu desk

Recent Posts

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

8 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

32 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

52 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

55 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

1 hour ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago