இந்தியாவும் பாலியல் குற்றவாளிகளை கண்காணிக்கும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவையும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்நிலையில், பாலியல் குற்றவாளிகள் குறித்த ஆவணங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் பராமரிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. இதன்படி, பாலியல் குற்றவாளிகள் குறித்த விவரங்கள் அனைத்து மாநிலங்களிடையே காவல்துறையினரால் பரிமாறிக் கொள்ளப்படும்.
மேலும், இந்தக் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். ஏற்கனவே இந்த ஆவண பரிமாற்ற முறை, இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…