டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த திங்கட்கிழமை மாலையில் இருந்து டெல்லி கவர்னர் அலுவலகத்தில் தன்னுடைய 3 மந்திரிகளுடன் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று ஆதரவு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கது அல்ல. டெல்லியிலும், புதுச்சேரியிலும் நடக்கும் விஷயங்களில் பெரிய வேறுபாடு இல்லை. சிறப்பான மாற்றத்தை விரும்பும் மக்கள் இதை ஏற்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
இதுபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதாதள அதிருப்தி தலைவர் சரத் யாதவ் ஆகியோரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…