உத்தரப் பிரதேசத்தில் ஒரே கிராமத்தில் 25 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு !

கடந்த 12 மாதங்களில் உத்தரப் பிரதேசம் கிராமம் ஒன்றில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் இறந்துள்ளதாக செய்திஒன்று தெரிவிக்கிறது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கண்ணுஜ் மாவட்டத்தில் உள்ளது தட்டியா கிராமம். இங்கு பலரும் கள்ளச்சாராயத்தை அருந்தியதால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் மனைவி ஏஎன்ஐயிடம் இதுகுறித்து தெரிவிக்கையில், ” இந்த கள்ளச்சாராயத்தை குடித்திராவிட்டால் என் கணவர் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார். இந்த சுகாதாரமற்ற மதுபான விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.
ஆனால் கள்ளச்சாராயம் அருந்தி நிறைய பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை கிராம நிர்வாகம் மறுத்தது.கண்ணுஜ் மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் கூறுகையில், ”அங்கு ஏற்பட்ட மரணங்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல. இதுகுறித்து ஆய்வு செய்ய, காவலர்கள் மற்றும் தலைமை மருத்துவ அலுவலரின் அலுவலகத்திலிருந்து ஒரு குழுவும் அக்கிராமத்தை நேரடியாக பார்வையிட்டு அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024