உத்தரப்பிரதேசத்தில் பனிப்பொழிவால் லாரியும் பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்து

Default Image

உத்தரப்பிரதேசத்தில் அதிக பனிப்பொழிவால் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில், பயணிகள் பலர் படுகாயமடைந்தனர்.
காஷ்மீர், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனி பொழிந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக சாலையில் வரும் வாகனங்கள் தெரியாததால், விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மொரதபாத் அருகே, சரக்கு லாரியும் தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்