Categories: இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவின் கோரிக்கை நிராகரிப்பு

Published by
Dinasuvadu desk

கடன் தொகையை முழுமையாக கட்டி விடுவதாக விஜய் மல்லையா கூறியிருந்த நிலையில் அவருக்கு எதிரான நடவடிக்கைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் வரும் 10 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்தநிலையில், அனைத்து கடன்களையும் கட்டிவிட தான் தயாராக இருப்பதாகவும், வங்கிகள் ஏற்க மறுப்பதாகவும் விஜய் மல்லையா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மல்லையா தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு அவர் தடை கோரியிருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் இந்த வழக்கில் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago