டெல்லியில் தில்லு மற்றும் கோகி என இரு ரவுடி கும்பல்கள் தனித்தனியே செயல்பட்டு வந்துள்ளன. ஆள் கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட வழக்குகளில் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.
இரண்டு கும்பல்களும் தங்களுக்குள் யார் பெரியவர்கள் என்பதற்காக கடந்த காலங்களில் பல முறை மோதியுள்ளனர். இதில் 2 கும்பல்களிலும் சிலர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், தில்லு கும்பலை சேர்ந்த சிலர் ஸ்கார்பியோ கார் ஒன்றில் இன்று சென்று கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் கார் மீது ஃபார்ச்சூன் காரில் வந்தவர்கள் மோதி உள்ளனர். இதில் கோகி கும்பலை சேர்ந்த சிலர் இருந்துள்ளனர்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து 2 கும்பலும் ஒருவரை ஒருவர் துப்பாக்கிகளால் சுட்டு கொண்டு மோதியுள்ளனர்.
இதில் 3 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த வழியே சென்ற பெண் மற்றும் தில்லு கும்பலை சேர்ந்த முகேஷ் ஆகியோர் அடங்குவர். சுட்டு கொல்லப்பட்ட மற்றொருவர் அடையாளம் காணப்படாத நிலையில் அவர் கோகி கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…