இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு..!

Default Image

டெல்லியில் தில்லு மற்றும் கோகி என இரு ரவுடி கும்பல்கள் தனித்தனியே செயல்பட்டு வந்துள்ளன.  ஆள் கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட வழக்குகளில் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

இரண்டு கும்பல்களும் தங்களுக்குள் யார் பெரியவர்கள் என்பதற்காக கடந்த காலங்களில்  பல முறை மோதியுள்ளனர்.  இதில் 2 கும்பல்களிலும் சிலர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், தில்லு கும்பலை சேர்ந்த சிலர் ஸ்கார்பியோ கார் ஒன்றில் இன்று சென்று கொண்டு இருந்துள்ளனர்.  அவர்கள் கார் மீது ஃபார்ச்சூன் காரில் வந்தவர்கள் மோதி உள்ளனர்.  இதில் கோகி கும்பலை சேர்ந்த சிலர் இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து 2 கும்பலும் ஒருவரை ஒருவர் துப்பாக்கிகளால் சுட்டு கொண்டு மோதியுள்ளனர்.

இதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களில் ஒருவர் அந்த வழியே சென்ற பெண் மற்றும் தில்லு கும்பலை சேர்ந்த முகேஷ் ஆகியோர் அடங்குவர்.  சுட்டு கொல்லப்பட்ட மற்றொருவர் அடையாளம் காணப்படாத நிலையில் அவர் கோகி கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்