இருட்டில் தவித்த கிராமங்கள் ஒளிபெற்றுள்ளன: பிரதமர் மோடி

Default Image

சவுபாக்கியா எனப்படும் அனைவருக்கும் மின்சாரம் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, 2009க்குள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்து அதில் தோற்று போனது என்றும் அப்போது, கிழக்கு மாநிலங்களில் 18 ஆயிரம் கிராமங்கள் மின்வசதி இன்றி இருட்டுக்குள் தவித்து வந்ததாகவும், அவற்றில் 14 ஆயிரத்து 500 கிராமங்களுக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, 2009க்குள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அப்போதைய அரசு நிறைவேற்றவில்லை என்பதையும் பிரதமர் மோடி கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்