Categories: இந்தியா

இரவில் மீண்டும் அத்து மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்தியா..!

Published by
Dinasuvadu desk

காஷ்மீரில்ரம்ஜான்மாதத்தில்ராணுவநடவடிக்கைகளைநிறுத்திவைக்கமத்தியஉள்துறைஅமைச்சகம்முடிவுசெய்தது.  இதனை தொடர்ந்து இதுபற்றிய உத்தரவுபாதுகாப்புபடைகளுக்குஅனுப்பப்பட்டது.

எனினும் எல்லை பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் தொடர்ந்து நடந்து வந்தது.  நேற்றும் இந்த தாக்குதல் தொடர்ந்தது.  இதற்கு இந்திய படையினர் துப்பாக்கி சூடு நடத்தி பாகிஸ்தான் படை வீரர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.  இதில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பலியானார்.

தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினரின் தரப்பில் 19 விநாடிகள் ஓடும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது.  அதில் பாகிஸ்தான் முகாம் ஒன்று தாக்கி அழிக்கப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது.  இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் கூறும்பொழுது, ஜம்மு எல்லை பாதுகாப்பு படையினரை பாகிஸ்தான் படையினர் தொடர்பு கொண்டு சண்டையை நிறுத்துங்கள் என கேட்டு கொண்டனர் என கூறியுள்ளார்.Image result for எல்லை பாதுகாப்பு படை இந்தியா பதிலடி

சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் படையினரின் முன்னிறிவிக்கப்படாத தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடுக்கு சரியான பதிலடியை எல்லை பாதுகாப்பு படையினர் கொடுத்தனர்.  இதில் பாகிஸ்தான் படை வீரர் ஒருவர் பலியானார்.  இதனால் போர்நிறுத்தத்தினை அவர்கள் கோரும் நிலை ஏற்பட்டது என கூறினார்.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் முன்னறிவிக்கப்படாத துப்பாக்கி சூடு தாக்குதலை நேற்றிரவு 10.30 மணியளவில் நடத்தியுள்ளனர்.

சிறிய ரக ஆயுதங்களை கொண்டு ராம்கார் பிரிவில் நாராயணபூர் பகுதியில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர்.  இதில் எல்லை பாதுகாப்பு படையினரின் முகாம்கள் மற்றும் கிராமங்கள் இலக்கிற்கு உள்ளாகின.

இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை கட்டுப்படுத்த பதில் தாக்குதல் நடத்தினர்.  தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது.  இதில் சேதவிவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தகவல் தெரிவிக்கின்றது

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

2 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

2 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

2 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

2 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago