இமாச்சலப்பிரதேசத்தில் சி.பி.எஸ்.இ., 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 3 பேர் கைதாகியுள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர், உடற்கல்வி ஆசிரியர், உதவியாளர் ஆகிய மூவரை காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அந்த நபர்களின் கைகளில் கேள்வித்தாள்கள் கிடைத்ததாகவும் அதை வேறொரு காகிதத்தில் எழுதி மாணவர்களுக்கு அனுப்பியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் டெல்லி அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
ஏற்கெனவே டெல்லியில் உள்ள Mother Khazani Convent என்ற பள்ளியின் ஆசிரியர்கள் இருவர், ட்யூட்டருக்கு கேள்வித்தாளை தேர்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அனுப்பியதாக மூவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…