இமாச்சலப்பிரதேசத்தில் சி.பி.எஸ்.இ., 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில்  3 பேர் கைது …!

Default Image

இமாச்சலப்பிரதேசத்தில் சி.பி.எஸ்.இ., 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில்  3 பேர் கைதாகியுள்ளனர்.  இமாச்சலப்பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர், உடற்கல்வி ஆசிரியர், உதவியாளர் ஆகிய மூவரை காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அந்த நபர்களின் கைகளில் கேள்வித்தாள்கள் கிடைத்ததாகவும் அதை வேறொரு காகிதத்தில் எழுதி மாணவர்களுக்கு அனுப்பியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் டெல்லி அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

ஏற்கெனவே டெல்லியில் உள்ள Mother Khazani Convent என்ற பள்ளியின் ஆசிரியர்கள் இருவர், ட்யூட்டருக்கு கேள்வித்தாளை தேர்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அனுப்பியதாக மூவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்