விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறும் வசதி இந்த ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விண்ணப்பித்த 4 மணி நேரத்தில், பான்கார்டு பெறும் வசதி இந்த ஆண்டு முதல் துவக்கப்பட உள்ளதாகவும், தொழில் துவங்குவோருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் ஏதுவாக, வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
இந்தியாவில், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருப்போர், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், வருமான வரி கணக்கு தாக்கலின் போது, அது தொடர்பான விவரம் அளிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 5 லட்சத்துக்கும் கீழ் வருவாய் கொண்டவர்களுக்கு பான் கார்டு விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் சுஷில் சந்திரா தெரிவித்தார்.
dinasuvadu.com
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…