இனி கல்லூரிகளில் ஜங்க் புட் உணவுகளை விற்கத் தடை …!அதிரடி உத்தரவை பிறப்பித்த பல்கலைக்கழக மானியக் குழு

Default Image
 கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில்  நொறுக்குத் தீனி உணவுகளை (JUNK FOOD) விற்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு  பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது, நொறுக்குத் தீனி உணவு வகைகளை மாணவ, மாணவிகள் சாப்பிடுவதால் அவர்களின் ஆரோக்கியம் கெடுகிறது. மேலும் அவர்கள் உடல் எடையும் அதிகரித்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு பல்வேறு நோய்களும் இது போன்ற உணவு வகைகளால் வருகின்றன. குறிப்பாக இந்த வகை உணவுகளால் அவர்களின் எடை அதிகரித்து பாதிக்கப்படுகின்றனர்.
Related image
இதைத் தடுக்கவே கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் நொறுக்குத் தீனி  (JUNK FOOD) உணவுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த உத்தரவின்பேரில் இந்தத் தடையை அமல்படுத்துகிறோம்.இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்