இந்துத்வா சக்திகளின் கைகூலியாக மாறிவிட்டாரா கிருஷ்ணசாமி ??

Default Image

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 நாடு முழுவதும் பதற்றமான நாளாக ஆண்டு தோறும் கருதப்படுகின்றது இந்நாளை முஸ்லிம்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர் இந்நாளில் இஸ்லாமிய சகோதர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம் .அதனால் டிசம்பர் 5ம் தேதி முதலே போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபடுவர் .இதன் காரணமாக டிசம்பர் 6 என்றாலே போலீசாருக்கும் மக்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தும் .
இப்படி ஒரு மிகப்பெரிய பதற்றமான நாளில் பட்டியல் வெளியேற்ற ஆர்ப்பாட்டம் நடத்த கிருஷ்ணசாமி திட்டமிட்டது ஏன் ?


அப்பாவி தேவேந்திர இளைஞர்களை பகடைக்காயாக பயன்படுத்தி தன் சுயநல அரசியல் தேவைக்காக இஸ்லாமியர்கள் துக்க தினமாக கடைபிடிக்கும் டிசம்பர் 6ரில் போராட்டம் நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய போக்கு தேவேந்திரகளை முசுலீம் மக்களுக்கு எதிராக திசைதிருப்ப நினைக்கும் இந்துத்து சக்திகளுக்கு துணைபோவது தவிர வேறெதுவும் தென்படவில்லை .
சமுதாய அடையாளக்கொடியை பயன்படுத்தி எம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் இத்தைகைய போக்கை அணைத்து இயக்கங்களும் ,அமைப்புகளும் வன்மையாக கண்டிக்க முன்வரவேண்டும் .இத்தகைய போக்கை கண்டும் காணாமல் நாம் பயணித்தோமேயானால் மிகப்பெரிய சுயநலவாதிகளாக வரலாறு நம்மை தூற்றும்…என மற்ற அமைப்பினர் புதிய தமிழகத்தின் நிலைபாட்டை விமர்சித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்