Categories: இந்தியா

இந்திய வரலாற்றின் கருப்பு நாள் – டிசம்பர் 6…!!

Published by
Dinasuvadu desk

இந்திய வரலாற்றின் கருப்பு நாள் – டிசம்பர் 6
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இடம் அயோத்தி. அயோத்தி இராமர் பிறந்த இடமென்றும், அது புனிததன்மை வாய்ந்தாகவும் கருதப்படுகிறது. 1528ஆம் ஆண்டு முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் ‘மிர் பாங்கியினால்’ முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி ஒன்று கட்டப்பட்டது. இந்நிலையில் மிர் பாங்கி அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே பாபர் மசூதியை கட்டினார் என்று இந்துக்கள் கருதப்பட்டது.
முன்னதாக, பல ஆண்டுளுக்கு முன்பு இவ்விடம் இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1949ஆம் ஆண்டு வரை, அயோத்தி அமைதியாக தான் இருந்தது. இதன் பிறகே அயோத்தி யாருக்கான இடம் என சர்ச்சை ஆரம்பித்தது.
1949ஆம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதி பாபர் மசூதியில் தொழுகை முடிந்த பிறகு யாரோ சிலர் மசூதிக்குள் நுழைந்து, ராமர் சிலையை வைத்தது. சிலை இருக்கும் காரணத்தை கூறி அப்போதைய நீதிபதி கே.கே.நாயர் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 23ந் தேதி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். 33 ஆண்டுளுக்கு பிறகு வேறு ஒரு நீதிபதியால் பூஜைக்காக திறக்கப்பட்டது.1986ஆம் ஆண்டு பிப்ரவரி 1ந் தேதி, பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
இடம் யாருக்கு சொந்தம் என அமைதியாக இருந்த அயோத்தி கலவர பூமியாக மாறியது. டிசம்பர் 6 1992ஆம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் சுமார் 2000 மக்கள் கொல்லப்பட்டனர்.
கலவரத்தின் தாக்கம், பல மாதங்களுக்கு இருந்தது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் தாக்குவதும் வீடுகளுக்குத் தீ வைப்பதும் கடைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சேதப்படுத்துவதுமாக இருந்துவந்தது. நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர், டெல்லி என பல இடங்களில் ஏற்பட்டு பல உயிரிழப்புக்கு வழிவகுத்தது. 1993ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்புக்கும் இது முதன்மையான காரணமாகவே இருந்தது.இந்தியா மாத சார்ப்பற்ற நாடு என்று கருதுவதில், கேள்வி எழும்பிய நாள் இந்நாள் டிசம்பர் 6.

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

51 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago