மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பாகிஸ்தான் ராணுவம்,இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சிய நிலையில், மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் படைக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் பதுங்கு குழிகளை தாக்க அழித்ததற்கான வீடியோவையும் வெளியிட்டது.
இதனால் நிலைகுலைந்து போன பாகிஸ்தான் ராணுவம், ஜம்முவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமை தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, இந்திய படையினர் தாக்குதலை நிறுத்திய அடுத்த சில மணி நேரத்தில், ஜம்முவின் ஆர்னியா பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
சிறிய ரக மோட்டார் குண்டுகளை வீசி, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுத்திருப்பதாகவும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படும் என்றும் ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…