இந்தியாவின் 4 பெருநகரங்களில்,போக்குவரத்து நெரிசலால் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
பாஸ்டன் கன்சல்ட்டிங் குரூப் என்கிற நிறுவனம் டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து அங்குள்ள பொதுமக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது. அதில் இந்த 4 நகரங்களிலும் போக்குவரத்து நெரிசலால் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகக் தெரியவந்துள்ளது. நெருக்கடி நேரங்களான காலை 7மணி முதல் 9 மணி வரையும், மாலை 6மணி முதல் 8 மணி வரையும் குறிப்பிட்ட தொலைவைக் கடக்க மற்ற நேரங்களைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு நேரம் ஆவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் மும்பை முதலிடத்திலும் கொல்கத்தா இரண்டாமிடத்திலும் உள்ளன. ஆய்வுக்காகப் பேட்டி கண்டவர்களில் 89விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கார் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…