மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பட்சத்தில், அவர் அடைக்கப்பட உள்ள சிறையின் வீடியோ இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
வங்கி கடன் மோசடி வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான விஜய் மல்லையா மீதான வழக்கில், அவரை லண்டனிலிருந்து நாடுகடத்தும் பட்சத்தில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் என வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்தது இருந்தது. இந்நிலையில் சிறை பாதுகாப்பு குறித்து வீடியோவை தாக்கல் செய்ய கடந்த மாதம் 31ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது .
இந்த நிலையில் சிபிஐ ஆர்தர் சாலை சிறையை வீடியோ எடுத்தது. அதில் 12ம் எண் அறையில் போதிய சூரிய வெளிச்சம் வருவது காட்டப்பட்டுள்ளது. மேலும் தனியாக கழிவறை, தொலைக்காட்சி பெட்டி,மற்றும் சுத்தமான படுக்கை, தலையணை போன்றவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ரூ.9,000 கோடி வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்து விட்டு லண்டனில் தலைமறைவாக இருந்தவர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…