ஆஷிஃபா சிறுமி வழக்கு: வரும் 28ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Published by
Venu

கத்துவா நீதிமன்றம் , ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஜம்மு பகுதியைச் சேர்ந்த முகமது யூசப் புஜ்வாலா என்பவரின் 8 வயது மகள், கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி காணாமல் போனார். ஜனவரி மாதம் 16ம் தேதி அவரது உடல் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் அது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் காவல்துறை அதிகாரி உதவியுடன் போதை மருந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவர் சிறுவன் என்பதால் அவர்மீது தனியாகவும், மற்ற 7 பேர் மீது தனியாகவும்

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறுமி ஆஷிஃபா வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரும் கத்துவா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திக்கை நகல்களை வழங்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Published by
Venu

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

33 mins ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

2 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

3 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

4 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

5 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

6 hours ago