Categories: இந்தியா

ஆளில்லாத தீவில் 29 ஆண்டுகளாக நிர்வாண கோலத்தில் வாழ்ந்து வந்த முதியவர்..!

Published by
Dinasuvadu desk
ஜப்பானில் உள்ள யயியமா தீவில் கடந்த 29 ஆண்டுகளாக 82 வயதான மாசாபுமி நாகசாகி தனியாக வாழ்ந்து வந்துள்ளார்  . நிம்மதியாக மரணமடைய ஒரு இடம் தேடி அலைந்ததாகவும், இறுதியில் இந்த தீவினை கண்டடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.சுத்தமான குடிநீர் இன்றி, உடைகள் ஏதும் இல்லாமல், இரவானால் நிலவு வெளிச்சம் மட்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அவர் தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த தீவில் ஜப்பான் மீனவர்கள் கூட செல்வதில்லை எனவும், ஜப்பானியர்களால் புறந்தள்ளப்பட்ட சில தீவுகளில் இது ஒன்று எனவும் கூறப்படுகிறது.கடந்த 1989 ஆம் ஆண்டு முதன் முறையாக இந்த தீவுக்கு சென்ற நாகசாகி இரண்டு ஆண்டு காலம் மட்டும் தங்கிச் செல்ல முடிவு செய்துள்ளார்.ஆனால் நீண்ட 29 ஆண்டு காலம் அவர் அந்த தீவில் தனியாக வாழ்ந்துள்ளார். இருந்த ஒரே ஒரு ஆடையும் காலப்போக்கில் கிழிந்துபோக, அதன் பின்னர் நாகசாகி நிர்வாணமாகவே இருந்து வந்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு இவர் தொடர்பான தகவல் வெளியாகவே, சர்வதேச ஊடகம் ஒன்று இவரை நேர்காணல் செய்துள்ளது.அப்போது இவரை நிர்வாண துறவி என பெயரிட்டு செய்தி வெளியிட்டது. தற்போது மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் நாகசாகியை மீட்டுள்ள அதிகாரிகள் அரசு குடியிருப்பு ஒன்றில் தங்க வைத்துள்ளனர். குறித்த தீவை பாதுகாப்பதே தமது தலையாய பணி என கூறி வந்த நாகசாகி, தமக்கு மரணம் நேர்ந்தால் அது இந்த தீவில் நடக்க வேண்டும் எனவும் கூறி வந்துள்ளார்.

Recent Posts

“பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை”….அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி கைது?

“பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை”….அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி கைது?

சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…

2 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஏவப்பட்ட 200 ராக்கெட்டுகள்! 500-ஐ நெருங்கும் உயிரிழப்பு!

லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…

23 mins ago

சரசரவென உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் ரூ.7,000 தொட்டது.!

சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…

33 mins ago

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட்.? அடுத்த அதிர்ச்சி சம்பவம்…

தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…

42 mins ago

“பிரியங்காவை அப்படி பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வனிதா ஆதங்கம்!

சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…

43 mins ago

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

17 hours ago