தேர்தல் விழிப்புணர்வு குறித்த தன்னார்வ அமைப்பினர், தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் செலவு செய்த தொகையைவிட குறைவாகவே கணக்கு காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் ஏடிஆர் (ADR) என்ற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், அறப்போர் இயக்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பேசினர். அப்போது, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் வேட்பாளர்கள் செய்த செலவினங்கள் குறித்து ஆய்வு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். அந்த கணக்கெடுப்பின்படி, கேரளாவில் வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட செலவுத்தொகையில் 70 சதவிகிதம் மட்டுமே செலவு செய்ததாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 47.80 சதவிகிதம் மட்டுமே செலவு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட பல மடங்கு செலவு செய்வதுதான் உண்மை என்று ஏடிஆர் மற்றும் அறப்போர் இயக்கத்தினர் கூறியுள்ளனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…