Categories: இந்தியா

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு : இந்தியா வரவேற்பு..!

Published by
Dinasuvadu desk

ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். தலிபான்கள் வன் முறையை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை தலிபான்கள் ஏற்றுக்கொண்டனர். கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில், முதல் முறையாக தலிபான்கள் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர்.

அந்த 3 நாட்களிலும் போர் நிறுத்தத்தை அவர்கள் மீறவில்லை. அதுமட்டுமின்றி, ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலிபான்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து கூறினர். பொது மக்களுடனும் தலிபான்கள் ‘செல்பி’ படங்கள் எடுத்து, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆப்கானிஸ்தான் மக்களிடையே இந்த போர் நிறுத்தம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதனால் திருப்தி அடைந்த அதிபர் அஷ்ரப் கனி, போர் நிறுத்தத்தை மேலும் 9 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார். தலிபான்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு பற்றி உடனடியாக தலிபான்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், சமாதானத்தை தலிபான்கள் விரும்பும்பட்சத்தில் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் இந்த போர்நிறுத்த நீட்டிப்பு அறிவிப்பை இந்தியா வரவேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லா சூழ்நிலையில் அமைதி மற்றும் சமரச நடைமுறைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

‘ஆப்கானிஸ்தான் அதிபர் கனி போர் நிறுத்தத்தை நீட்டிப்பு செய்திருப்பதை வரவேற்கிறோம். ஆயுதக்குழுக்களும் அவற்றின் ஆதரவாளர்களும் பயங்கரவாத வன்முறையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கு இந்த போர்நிறுத்த நீட்டிப்பு வழிவகுக்கும் என நம்புகிறோம்’ என்றும் அவர் கூறினார்.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

5 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

5 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

5 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

5 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

6 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago