ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்தர மோடி சந்திப்பு!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்தர மோடியை சந்தித்தார்.
தெலுங்கானா மாநிலம் உருவானபின் ஆந்திராவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சமாளிக்க வரிச்சலுகை, சிறப்பு நிதி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை நிதி தொகுப்புகள் விடுவிக்கப்படாததால், ஆந்திர அரசு அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது, மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
source: dinasuvadu.com