ஆதாரை பயன்படுத்தி தகவல்களை திருட முடியாது.. மத்திய அரசு விளக்கம் ..

Default Image

ட்ராய் தலைவரின் ஆதார் எண்ணை  கொண்டு எந்த தகவல்களையும் எடுக்க முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.Image result for ஆர்.எஸ்.சர்மா

தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான ட்ராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு முடிந்தால் தகவல்களை எடுத்துக்காட்டுங்கள் என்று சவால் விடுத்திருந்தார்.இதனை சவாலாக ஏற்று பலரும் அவரை பற்றிய தகவல்களை எடுத்து பதிவிட்டிருந்தனர்.

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ஆதார் எண் இல்லாமலேயே பான் நம்பர்,போன் நம்பர் பயன்படுத்தி இது போன்ற தகவல்களை பல்வேறு இணையதளங்களில் இருந்து பெற முடியும்.இது போன்றே ஷர்மாவின் தகவல்களையும் எடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இது டிஜிட்டல் உலகத்தின் வெளிப்பாடு என்றும் அதற்காக ஆன்லைன் நடவடிக்கைகளை குறை குறை முடியாது என்றும் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்