Categories: இந்தியா

ஆதாருடன் வங்கி-செல்போன் எண் இணைக்கும் சட்டத்திருத்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!

Published by
Dinasuvadu desk

ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை இணைக்கும் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆதார் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமில்லை என தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெலிகிராப் சட்டத்திலும் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி புதிய சிம் கார்டு பெறவும் வங்கி கணக்கு தொடங்கவும் பொது மக்கள் தாங்களாக முன் வந்து ஆதார் எண்ணை அளிக்கலாம். ஆனால் இது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது ஆகும்.
இதனிடையே சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டமான உஜ்வாலா திட்டத்தையும் நீட்டித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரசு ஒவ்வொரு இணைப்பிற்கும் ஆயிரத்து 600 ரூபாய் மானியமாக வழங்குகிறது. பயனாளிகள் இத்திட்டத்தில் சமையல் அடுப்பை மட்டும் வாங்கினால் போதும். இதையும் மாத தவனை முறையில் செலுத்தலாம். மாற்று சிலிண்டருக்கான செலவை பயனாளிகளே ஏற்க வேண்டும்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago