ஆட்சியை தக்க வைக்க துடிக்கும் பாஜக…..ஆட்சியை பிடிக்க துடிக்கும் காங்கிரஸ்……சத்தீஸ்கர் 2 கட்ட வாக்குபதிவு துவங்கியது…!விறுவிறு வாக்குபதிவு…!!!

Default Image

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று வாக்குபதிவு தொடங்கியது.

Image result for வாக்குபதிவுசத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. சத்தீஸ்கர் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பா.ஜகவும் தீவிரமாக உள்ள நிலையில் அம்மாநிலத்தில் மூன்று முறை ஆட்சியை இழந்த வரும் காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.

Related image

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி தலைவராகிய அஜித் ஜோகி பகுஜன் சமாஜ் , மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறார்.

Image result for காங்கிரஸ் ராகுல்சில நாள்களுக்கு முன் அதாவது கடந்த நவ12ல் சத்தீஸ்கரில் நக்சல்களால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளுக்கு மட்டும் முதல் கட்ட தேர்தல்நடைபெற்றது.இன்று இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல்தொடங்கியது. அந்த மாநிலத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இருக்கும் 72 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதை அடுத்து அம்மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் நக்சல்களால் பாதிக்கப்பட்ட, கரியாபந்த், கபிர்தம், பல்ராம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில்  கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இன்று முடியும் இந்த தேர்தல் டிச11ல் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெறுகிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்