அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க முடியாது : துணை நிலை ஆளுநர் ..!

Default Image

மூன்றாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க முடியாது என  துணை நிலை ஆளுநர் மறுத்துவிட்டார்.

டெல்லியில் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரும் சந்திப்பதில்லை என்றும், அரசு கொண்டுவரும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நேற்றுமுன்தினம் மனு அளிக்கச் சென்ற முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை, துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் சந்திக்க மறுத்துவிட்டார்.இதையடுத்து, துணை நிலை ஆளுநர் வீட்டின் வரவேற்பறையில், அவர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்