Categories: இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை – உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ..!

Published by
Dinasuvadu desk
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற விவகாரத்தில் இன்னும் இறுதி தீர்வு ஏற்படவில்லை. இந்த  வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்தி சென்று ராமர் ஜென்ம பூமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் முதல்வர் பேசுகையில், “நாம் இந்த உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயகத்தில் வாழ்கிறோம். இதில் நீதித்துறை, நிர்வாகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த விதிகளுக்கு உட்பட்டுள்ளனர். நாம் அந்த விதிகளை மனதில் கொள்ள வேண்டும்.
ராமர் இந்த உலகத்திற்கே கடவுள் போன்றவர். அயோத்தி ராமரது ஆசீர்வாதத்தை பெற்றுள்ளதால் இங்கு தான் ராமர் கோவில் அமையும். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. மடாதிபதிகள் இவ்வளவு நாள் பொறுமையாக இருந்து விட்டீர்கள். இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். இறைவன் ராமனின் அடையாளமே கண்ணியம் தான். சமுதாயத்தில் கண்ணியத்தின் வெளிபாடாக மடாதிபதிகள் திகழ்கின்றனர். நாம் கண்ணியத்தின் வரம்பு எல்லைக்குள் இருக்கும் போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்”என்று கூறினார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியினரை மறைமுகமாக தாக்கிய யோகி ஆதித்யநாத் கூறுகையில், “ஒரு புறம் சில மூத்த தலைவர்கள் உச்சநீதிமன்றம் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராமர் கோவில் பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். சில காங்கிரஸ் தலைவர்கள் பாஜக அரசு அயோத்தி பிரச்சினையில் எதுவும் செய்யவில்லை எனக் கூறுகின்றனர். பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி செல்லும் போது இவர்கள் சதி செய்ய நினைக்கிறார்கள். கும்ப மேளா நிகழ்ச்சிக்கு உலக அங்கீகாரத்தை பெற்று கொடுக்க கடந்த அரசு தவறி விட்டது. ஆனால் தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான அரசு கும்ப மேளா நிகழ்ச்சிக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அனைத்து மடாதிபதிகளின் ஆசீர்வாதங்களும் பிரதமர் மோடிக்கு கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.
இதனிடையே சமீப காலங்களில் ராமர் கோவில் கட்டுமானம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் முறையாக இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

7 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

15 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago