Categories: இந்தியா

அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிப்பு..!!

Published by
Dinasuvadu desk

2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்து நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வஜே, நாடியா முராத் ஆகிய இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டு வருபவர். காங்கோ நாட்டில் ஏராளமான போராளிக் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் பெண்களைக் கடத்திச் சென்று வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. காங்கோ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் முக்வஜே பெண்களுக்கான மருத்துவர் ஆவார். போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
ஒரு நாளைக்கு 18 அறுவை சிகிச்சை வரை செய்யக்கூடிய அளவிற்கு பணியாற்றி உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் எதும் வாங்காமல் மருத்துவம் பார்க்கக் கூடியவர். போர்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருபவர்.நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நாடியா முராத் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர். குர்து மனித உரிமை போராளியாக செயல்பட்டு வருகிறார். ஐஎஸ் அமைப்பினர் ஈராக்கில் ஏராளமான மக்களை கொன்று குவித்து வந்தனர். இந்நிலையில் சிறுபான்மையினரான யாசிதி பெண்களுக்காக உலகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வரும் டிசம்பர் 10 ஆல்பரட் நோபல் நினைவு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago