Categories: இந்தியா

அமலாக்கத் துறைக்கு லஞ்சம்…சரணடைந்த முன்னாள் பாஜக அமைச்சர் …!!

Published by
Dinasuvadu desk

அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 20 கோடி லஞ்சம் கொடுப்பதாக கூறி, நிதி மோசடியில் ஈடுபட்ட கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் உள்ள குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் சனிக்கிழமையன்று சரணடைந்தார்.
இவர் ஏற்கனவே சுரங்க முறைகேடுகளில் சிக்கி ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சையத் அகமது ஃப்ரீத் என்பவர் ஆம்பிடெண்ட் என்ற நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ. 600 கோடி வரை மோசடி செய்துள்ளதாக பெங்களூரு குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் சையத் அகமது ஃப்ரீதை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, கர்நாடக பாஜக‌ முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான‌ ஜனார்த்தன ரெட்டி அவருடன் சேர்ந்து நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

அதாவது ஜனார்த்தன ரெட்டி தனக்கு மத்திய அரசுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் சையத் அகமது ஃப்ரீத் மீதான வழக்குகளைச் சாதகமாக்க முடியும் என்று கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக சையத் அகமது ஃப்ரீத்திடம் ரூ. 21 கோடி பெற்றுள்ளார். அதில் ரூ.3 கோடி ரொக்கமாகவும், ரூ.18 கோடி மதிப்புள்ள 57 கிலோ தங்கத்தையும் ஜனார்த்தனரெட்டி பெற்றதாக காவல்துறையினரிடம் சையத் அகமது ஃப்ரீத் வாக்குமூலம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜனார்த்தன ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரைக் கைது செய்யத் துணை ஆணையர் மஞ்சுநாத் சவுத்ரி தலைமையில் 4 படைகள் அமைத்து பெங்களூரு, பெல்லாரி, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் தீவிரமாக தேடினர்.

இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் உள்ள குற்றப் பிரிவு காவல்துறை அலுவலகத்தில் சனிக்கிழமையன்று சரணடைந்தார். ஏற்கெனவே சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கி, ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜனார்த்தன ரெட்டி மீண்டும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dinauvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

4 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

5 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

5 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

5 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

5 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

5 hours ago