அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் நாட்டில் உள்ள அணைகளை கண்காணித்து பாதுகாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட அணைகள் பாதுகாப்பு மசேதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். எச்டிஎப்சி வங்கி அன்னிய நேரடி முதலீடு மூலம் 24 ஆயிரம் கோடி வரை முதலீட்டைப் பெறவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதர பிற்படுத்தப் பட்டோர் வகுப்பில் உட்பிரிவுகளை கண்டறிந்து மத்திய பட்டியலில் சேர்ப்பது தொடர்பான ஆய்வுக்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் காலக்கெடுவை வரும் ஜுலை மாதம் வரை நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வேளாண் கல்வியை மேம்படுத்தும் வகையில் 2225 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஆண்டு செயல் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…