அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி..!

Default Image

அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் நாட்டில் உள்ள அணைகளை கண்காணித்து பாதுகாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட அணைகள் பாதுகாப்பு மசேதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். எச்டிஎப்சி வங்கி அன்னிய நேரடி முதலீடு மூலம் 24 ஆயிரம் கோடி வரை முதலீட்டைப் பெறவும் அனுமதி வழங்கப்பட்டது.

இதர பிற்படுத்தப் பட்டோர் வகுப்பில் உட்பிரிவுகளை கண்டறிந்து மத்திய பட்டியலில் சேர்ப்பது தொடர்பான ஆய்வுக்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் காலக்கெடுவை வரும் ஜுலை மாதம் வரை நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வேளாண் கல்வியை மேம்படுத்தும் வகையில் 2225 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஆண்டு செயல் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்