அட்டைப் பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து..!

Default Image

மத்தியப் பிரதேசத்தில் அட்டைப் பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலுள்ள ஃபோக்ஸ்வேகன் பழுதுநீக்க மையத்தில் பரவியதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கார்கள் எரிந்து சேதமடைந்தன.

குவாலியரில் அட்டைப் பெட்டித் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட, தொழிற்சாலை ஊழியர்கள் கட்டிடத்திலிருந்து வெளியேறியதோடு, அதனருகில் இருந்த ஃபோக்ஸ்வேகன் பழுதுநீக்க மையத்திலும் தகவல் கொடுத்தனர். இரு கட்டிடங்களிலும் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர்.

பழுதுநீக்க மைய்யத்தின் ஊழியர்கள் தங்களால் இயன்ற வரையிலான கார்களை வெளியே எடுத்துவந்த போதும் 7 கோடி ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரையிலான கார்கள் தீயில் எரிந்து சேதமாகியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்