இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது . டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் மோடி , பிரேசில் அதிபர் மெசியாஸ் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் ஒவ்வொரு நாளும் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். தினமும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் குறிப்பாக சுதந்திரதினம் , குடியரசு தினம் போன்ற சிறப்பு வாய்ந்த நாள்களில் அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சியில் கூடுதலாக இருக்கைகள் அமைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த இரு நாள்களில் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர்.
மேலும் பல இராணுவ அதிகாரிகள் மற்றும் பஞ்சாப் இராணுவ அதிகாரிகள் ,அமைச்சர்கள் என பலர் வருவதால் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டு ,இந்திய இராணுவ வீரர்களின் அணிவகுப்பு பார்க்கின்றனர்.இராணுவ வீரர்களின் அணிவகுப்பு பார்க்கவே கண்ணை கவரும் வகையில் இருக்கும். சுதந்திரதினம் , குடியரசு தினம் போன்ற நாள்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து வருகின்றனர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…