அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பரிந்துரைத்தார்..!உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா..!!

Default Image

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

Image result for ரஞ்சன் கோகோயை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

Related image

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப் பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார் தீபக் மிஸ்ரா.மத்திய அரசு அவரின் பரிந்துரையை ஏற்கும் பட்சத்தில் அக்டோபர் 3-ம் தேதி ரஞ்சன் கோகோய் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்