அடுத்தமுறை போர்வந்தால், சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் துணையுடனே போரிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ராணுவத் தொழில்நுட்பக் கருத்தரங்கில் பேசிய அவர், வீரர்களுக்கு குறைந்த எடை கொண்ட குண்டுதுளைக்காத உடைகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார். பாதுகாப்புத்துறைக்குத் தேவையான ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து வருவதாகவும், அடுத்த முறை போரிடும் சூழல் வந்தால், சொந்த நாட்டு ஆயுதங்கள் மூலமே போரை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராணுவத்தின் அனைத்து நிலைகளிலும் நவீனத்துவம் தேவைப்படுவதாக கூறிய பிபின் ராவத், எதிர்காலப் போர்கள் கடினமாக இருக்கும் என்பதால், அதற்கான முன் தயாரிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…