திருவில்லிபுத்தூரில் ஆட்டோ டிரைவர் மீது நகைக்கடை அதிபர் கொலை முயற்சி…

Default Image

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள வடக்கு ரதவீதியில் செயல்படுகிற ஆட்டோ நிறுத்த தலைவர் சீனிவாசன்  என்பவர் சில சமூக விரோதிகளின் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். மேலும் இவர் புதிய தமிழகம் கட்சியை சார்ந்தவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன்  மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் சாமுவேல் ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசனை சந்தித்தார்கள்.

ஆட்டோ நிறுத்தம் இங்கே செயல்படக்கூடாது என நகைக்கடை அதிபர் விபிஎம் சங்கர் தான் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்